பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பிறந்து 10 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை பலி !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பூஞ்ச் மாவட்டம் ஷான்பூர் , சவுஜியான் , மெந்தார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் இந்திய ராணுவம் நிலைகள் மற்றும் அங்கு உள்ள கிராம புறங்களில் சிறு ஆயுதங்கள் சிறிய குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல் ஏராளமான வீடுகள் சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் பாத்திமாஜன் (35) என்ற பெண்ணும் பிறந்து 10 நாட்களே அவரது குழந்தை உட்பட ஆரிப் என்பவரும் படுகாயமடைந்தனர்.இவர்கள் மூன்று பேரையும் பூஞ்ச் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அந்த பிஞ்சு குழந்தை பரிதாபமாக இறந்தது.படுகாயம் அடைந்த பாத்திமாஜன் மற்றும் ஆரிப் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024![chennai rains](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/chennai-rains-2.webp)
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024![Mumbai Boat Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Mumbai-Boat-Accident.webp)
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)