சமஸ்கிருதம் ஒரு “Dead Language” என வடமாநிலத்தவர்களுக்கும் புரியும்படி சொல்கிறேன்-வைகோ

தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம் 4000 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது.இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சமஸ்கிருதம் என்பது செத்துப்போன மொழி என்று ஆயிரம் முறை கூறுவேன் .சமஸ்கிருதம் ஒரு “Dead Language” என வடமாநிலத்தவர்களுக்கும் புரியும்படி சொல்கிறேன் என்று தெரிவித்தார். தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையானது என்று எழுதியவன் யார்? என்று கேள்வி எழுப்பின்னர்.
தமிழைவிட சமஸ்கிருதம் பழமையான மொழி என்று அறிவித்தவர் யார் என்பதை கண்டுபிடித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025