இளம் பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ நகைகள் அகற்றம்!

மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் உட்பட்ட மார்கிராம்  கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (26)  மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.  கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த கம்மல் , வளையல் மூக்குத்தி, மற்றும் தங்கம் ,செம்புகளால் ஆன  நகைகள் திடீரென காணாமல் போனது இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வீட்டில் இருந்தவர்கள் யாரும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மீது அனைவரும் கவனம் திரும்ப அவரை ரகசியமாக கவனிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவரிடம் சென்று உள்ளனர். ஆனால் எங்கேயும் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக பிர்பும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு   பல்வேறு சோதனை செய்யபட்ட பிறகு அவர் வயிற்றில் இருந்தது அதிகமான பொருட்கள்இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 5 ரூபாய் ,10 ரூபாய் நாணயங்கள் மற்றும்  செயின் ,கம்மல் ,மூக்குத்தி, போன்றவை என  1.5 கிலோ நகைகள்  வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டன.