பிக் பாஸ் மீரா மிதுனிடம் நிகழ்ச்சி நடைபெறும் ஈவிபி பிலிம் சிட்டியில் காவல் அதிகாரிகள் விசாரணை!!

மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி ரூ 50,000 மோசடி செய்ததாக சென்னை தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஜூலை 18ஆம் தேதி அந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மீரா மிதுனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ரூ50000 பணத்தை செழுத்தவும், விசாரணையின் போது ஆஜராகி, கையெழுத்திடவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் உள்ள  நிலையில், கையெழுத்திட வர முடியவில்லை. அதனால், நிகழ்ச்சி நடைபெறும் இடமான ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.