நாய்க்கு பயந்து வீட்டில் நுழைந்தவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை !

Default Image

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை  சேர்ந்த சுஜித் குமார் (28). இவர் தேவா பகுதியில் உள்ள ராகோபூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தியது.நாய்களுக்கு பயந்து சுஜித் குமார் அருகிலிருந்த வீட்டில் நுழைந்துள்ளார். நாய்களின் சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர் உள்ளே சுஜித்து இருப்பதை பார்த்து திருடன் என நினைத்து வீட்டில் இருந்தவர்கள் சுஜித்தை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் சுஜித் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டனர். தீ தாக்கம் தாங்கமுடியாமல் அலறித் துடித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுஜித்தை மீட்டு லக்னோ உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுஜித் குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்