தொடர்ச்சியாக ஓய்வு பெறும் இலங்கை வீரர்கள் ! நுவன் குலசேகரா ஓய்வு அறிவிப்பு !


இலங்கை அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யாக்கர் மன்னன் லசித் மலிங்கா நடந்த உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இவர் வங்கதேசம் மேற்கொள்ளும் சுற்றுபயணத்தின் முதல் ஒருநாள் தொடருக்கு பிறகு ஓய்வு பெறப் போவதாக இலங்கை அணியின் கேப்டனான திமுத் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

தற்போது மற்றோரு வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரா தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் இலங்கை அணியின் முக்கிய பவுலராக திகழ்ந்தவர். 2014-ல் இலங்கை அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது இவர் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் 2017 ஜூலைக்கு பிறகு இலங்கை அணியுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் 188 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 199 விக்கெட்களை பெற்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெள்ப்படுத்தினார்.

author avatar
Vidhusan