மின்னல் தாக்கி மற்றும் பாம்பு கடித்து 35 பேர் பலி !

Default Image

உத்திரபிரதேசத்தில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர் இறந்து உள்ளனர்.இது குறித்து உ.பி செய்தி தொடர்பாளர் கூறுகையில் , உ.பி மாநிலத்தின் 13 மாவட்டங்களில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர்இறந்து உள்ளனர்.

மேலும் இரண்டு பேர் பாம்பு கடித்து இறந்து உள்ளனர்.கான்பூர் மற்றும் பதேபூர் ஆகிய மாவட்டங்களில் தலா  7 பேரும் , ஜான்சி 5 , ஜாலவுன் 4 , ஹமீர்பூர் 3 , காசியாபாத் 2 , தியோரியா , குஷிநகர் , ஜான்பூர் , அம்பேத்கர் நகர் , பிரதாப்கர் ,கான்பூர் டெகத் , சித்ரகூட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிர் இழந்து உள்ளனர்.

மேலும் மின்னல் தாக்கி 13 பேர் காயமடைந்து உள்ளனர். 20 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது என கூறினார். இந்நிலையில் இறந்துபோன 35 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்க உத்திரபிரதேச  முதல்வர் யோகி ஆதித்யா உத்தரவு விட்டு உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai