ரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்!

Default Image

சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்று ஆடி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு சேலை மற்றும் சட்டை வழங்கியுள்ளது.

சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே இருக்கும் ஜவுளிக்கடை பூம்புகார் . ஆடி மாத சிறப்பு சலுகையாக முதலில் வரும் 100 பேருக்கு சேலை மற்றும் சட்டை 10 ரூபாய்க்கு வழங்குவதாக சலுகையை அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று  காலை கடை திறக்கும் முன்பே கூட்டம் அலைமோதியது. கடை திறக்கப்பட்டதும் அத்தனைபேரும் முண்டியடித்த படி கடைக்குள் சென்றனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்