ஐம்பது வருடங்களாக கடலில் மிதந்து கொண்டு இருந்த கடிதம் !

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் பால் என்பவரின் 9 வயது மகன் ஜியா எலியட்டும் மீன் பிடித்து கொண்டு இருந்தார்.அப்போது கடற்கரை மணலில் ஒரு பாட்டில் இருப்பதை அந்த சிறுவன் பார்த்து உள்ளார்.

உடனடியாக அந்த சிறுவன் பட்டியலை திறந்து பார்த்த போது அதில் ஒரு கடிதம் இருந்தது .அந்த கடிதம் 1969 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ம் தேதி 13 வயது கில்மோரே என்ற சிறுவன் ஒருவர் அந்த கடிதத்தை எழுதி உள்ளார்.

அந்த சிறுவன் அக்கடிதத்தில் “நான் இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு குடியேறுகிறேன் ,இந்த கடிதத்தை நான் கப்பலில் இருந்து எழுதுகிறேன்.யார் இந்த கடிதத்தை பார்கிறீர்களோ அவர்கள் எனக்கு பதில் அனுப்பவும் என அக்கடிதத்தில் கூறப்பட்டு இருந்து.

இந்நிலையில் அந்த கடிதத்திற்கு ஜியா பதில் எழுதி உள்ளார். கில்மோரேவிற்கு அப்போது 13 வயது தற்போது 63 வயது ஆகிறது.கில்மோரே மீண்டும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

author avatar
murugan