தானா வர தூக்கத்துக்கு எதுக்குடா ரூ.28,000 ! தூக்கம் வரவைக்கும் பேண்ட் !

உலகில் பல லட்சக்கணக்கானக்கனோர் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர்.இதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் மருத்துவர்கள் தூக்க மருந்தை பரிந்துரைப்பது கிடையாது.அதற்கு பதிலாக தூக்கத்தை தூண்டும் கருவிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

மருத்துவம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு நிம்மதியாக தூக்கம் வர ஒரு புதிய ஹெட் பேண்ட்டை தயாரித்து உள்ளது.

மருத்துவ ரீதியாக இதன் செயல் பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.இந்த பேண்ட் ஒரு செயலி மூலமாக இயக்கக்கூடியது.இதை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நிச்சியமாக இந்த பேண்ட் மூலமாக தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.நன்கு தூங்குவதால் புத்துணர்ச்சி பெறுவதாக டாக்டர் கூறுகின்றனர்.மேலும் டாக்டர் மற்றும் ஆராச்சியாளர்களால் இந்த பேண்ட் உருவாக்கப்பட்டது.ஒருநாளைக்கு 7 மணி நேரம் குறைவாக தூங்குவோர்க்கும் , தூக்கம் வராமல் அவதிப்படுவோருக்கும் இந்த பேண்ட் உதவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பேண்டின் விலை ரூ 28,000 .

 

author avatar
murugan