வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை

பணப்பட்டுவாடா புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்