ஏ.டி.எம்.மில் வெளிவந்த கள்ள நோட்டுகள்!அதிர்ச்சி அடைந்த மக்கள்!

Default Image

நாமக்கல்லில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி.இவர் தமது தேவைக்காக தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து 20,000 மற்றும் 20,000 ஆக இரண்டு முறையில் 40,000 பணத்தை எடுத்துள்ளார்.அப்போது எடுத்த பணத்தை பார்த்த அவர் அதிர்ச்சி அடித்துள்ளார்.ஏனெனில் கையில் இருந்த 10,000 பணம் கள்ளநோட்டுகளாக இருந்துள்ளது.

மேலும் ஐந்து 2,000 நோட்டுகள் கிழிந்து ஒட்டப்பட்ட நிலைமையில் இருந்துள்ளது.இதன் காரணமாக அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த நோட்டுகளை பெற்று கொண்ட காவல்துறையினர் ,வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதன் காரணமாக வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது.பின்னர் அந்த 10,000 கள்ளநோட்டுகளுக்கு பதிலாக வங்கி நிர்வாகம் வேறு 10,000 பணத்தை அளித்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்