பந்து கழுத்தில் அடித்ததன் மூலம் இறந்த இளம் கிரிக்கெட் வீரர் !

Default Image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பராமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சார்ந்த  ஜஹாங்கிர் அகமது வார்  என்ற 18 வயது இளைஞர் அங்கு நடந்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்று கொண்டார்.

நேற்று அவர் பேட்டிங் செய்யும் போது  பந்து வீச்சாளர் வீசிய வேக பந்து ஜஹாங்கிர் அகமது   கழுத்தில் அடித்தது.அப்போது அடிவாங்கிய அடுத்த நொடியிலே கீழே விழுந்தார்.உடனடியாக மைதானத்தில் இருந்த சக வீரர்கள் ஜஹாங்கிர் அகமதுவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஜஹாங்கிர்ரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனேவே ஜஹாங்கிர் இறந்து விட்டதாக கூறினார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் ஜஹாங்கிர் 11- ம் வகுப்புதான் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்