இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், “5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.சேதமடைந்த சாலைகள், பாலங்கள் 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்.புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும்”.. இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.