ராஜினமா செய்ய தயார்! மு.க. ஸ்டாலினிடம் அதிமுக அமைச்சர் உறுதி!

Default Image

நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விலக்கு மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படி தவறான தகவலை கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என கூறினார்.

இது குறித்து பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படவில்லை. அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. என கூறி, நான் தவறாக பதிவிட்டுருந்தால் நான் ராஜினாமா செய்ய தயார். நீங்கள் தவறாக குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் பதவி விலக தயாரா என பதிலடி கொடுத்துள்ளார்.

பிறகு திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், ‘ இம்மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிவில்நீட் விலக்கு மசோதா நிராகரிக்க பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அனால் நேற்று சி.வி.சண்முகம், நிராகரித்ததை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிமுகவின் இந்த செயல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது’ என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்