முகிலனை மீண்டும் கைது செய்தது காவல் துறை – பாலியல் வழக்கில் கைது

Default Image

சமூக ஆர்வலர் முகிலனை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தற்போது மீண்டும் காவல்துறை கைது செய்துள்ளது. கரூரை சேர்ந்த பெண்மணி குடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கில் அரசுக்கு எதிராக முகிலன் அவர்கள் ஆதாரங்களை திரட்டிய நிலையில், கடந்த பிப்ரவரி மதம் முதல் காணாமல் போனார். சுமார் 140 நாட்களுக்கு பின்னர், நேற்று இரவு திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி காவல் துறையினர் காட்பாடி வழியாக சென்னை அழைத்து வந்தனர். சிபிசிஐடி காவல்துறையினர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துள்ள நிலையில், கரூர் மாவட்ட காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

முகிலன் அவர்கள் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி, கரூரை சேர்ந்த  பெண் ஒருவர்  குளித்தலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகிலன்  கைது செய்யப்பட்டுள்ளார்.பின்னர் முகிலனை  கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்