மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் கடமையாற்றுவேன்-வைகோ

Default Image

மாநிலங்களவை தேர்தல் தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.இதனால் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன்.மதச்சார்பின்மையை காப்பாற்ற பாடுபடுவேன். கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க பணியாற்றுவேன் என்று கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்