அதிரடி காட்டிய ரோஹித் , ராகுல்! பங்களாதேஷ் அணிக்கு 315 ரன்கள் இலக்காக வைத்த இந்திய அணி !

Default Image

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக இருவருமே விளையாடி வந்தனர்.இப்போட்டியில் ரோஹித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

 பின்னர் அடுத்த வீரராக விராட் கோலி களமிறங்கினர்.நிதானமாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 77 ரன்னில் வெளியேறினர்.பிறகு ரிஷாப் பந்த் , விராட் கோலி இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.

கேப்டன் கோலி நிதானமாக விளையாடி 26 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரிஷாப் பந்த் 48 ரன்கள் அடித்தார். பின்னர் மத்தியில் களமிறங்கிய தோனி அதிரடி ஆட்டத்தை காட்டாமல் நிதானமாக விளையாடி 35 ரன்னில்  விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டை பறித்தார்.315 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu
edappadi and amit shah Nainar Nagendran
ADMK MP Thambidurai say about ADMK - BJP Alliance
d jeyakumar about bjp
Mitchell Starc About RR
gold price today