மைதானத்தில் அடித்து கொண்ட இரு அணி ரசிகர்கள் ! வைரலாகும் வீடியோ!

Default Image

நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.  லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய பாகிஸ்தான்  49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியை காண இருநாட்டில் உள்ள ஏராளமான ரசிகர்கள் ஹெடிங்லி மைதானத்தில்  குவித்தனர். இப்போட்டியில் இருநாட்டு வீரர்கள் விக்கெட் எடுத்தாலும் , சிக்ஸர் , பவுண்டரி அடித்தாலும் அந்நாடு ரசிகர்கள் அவர்களுக்கு கோஷமிட்டு தங்களது உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது.ஆனால் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சாளர் கடைசி சில ஓவரில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.போட்டி நடுவில் இருநாட்டு ரசிகர்களும் கோஷமிட்டனர்.அப்போது திடீரென இருநாட்டு ரசிகர்களும் இடையில் தகராறு ஏற்பட்டது.
முதலில் இருநாட்டு ரசிகர்களும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருநாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
https://twitter.com/MurtazaViews/status/1145050392507457536

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்