பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு செல்ல இந்திய அணி கையில் தான் உள்ளது -சோயப் அக்தர்!

Default Image

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் ஆறு போட்டிகளில் விளையாடி அதில் ஐந்து போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி புள்ளி பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய நாளை இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயப் அக்தர் யூ டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு செல்ல இந்திய அணி கையில் தான் உள்ளது என கூறியுள்ளார்.நாளை இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி வெளியேறிவிடும்.
பிறகு பாகிஸ்தான் அணி மீதம் உள்ள ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணியுடன்  வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு செல்லும் ,  இந்திய அணியுடன் அரை இறுதியில் மீண்டும் பாகிஸ்தான் மோத வாய்ப்பு ஏற்படும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்