தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்

Default Image

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் வருகின்ற  30-ஆம் தேதி அதாவது நாளை முடிவடைகிறது. இவருக்கு பதிலாக அந்த இடத்தில் புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரிபாதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் . தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறை உயர்அதிகாரி பொறுப்பை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி ஜூலை 1-ம் தேதி பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்