"ஜெய்ஸ்ரீராம்" சொல்ல சொல்லி ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இஸ்லாமியர் !

Default Image

மேற்கு வங்கம் மாநிலம் சௌத் பர்கனாஸ்  மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஒருவரை ஒரு கும்பல் “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கீழே தள்ளிவிட்டுள்ளது.ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்த சம்பவமானது நாட்டையே நாட்டையே அச்சுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றத்திலிருந்து இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட முறை இது போன்ற தாக்குதல்  சம்பவங்கள்  நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இதே போல் இஸ்லாமியர் ஒருவர் மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், மீண்டும் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க இஸ்லாமிய பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் . அவர் பார்கனாஸ் மாவட்டத்திருந்து ஹூக்ளி ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் ஏறிய ஒரு கும்பல் அவரை “ஜெய்ஸ்ரீராம்” சொல்ல சொல்லி தாக்கியுள்ளது. அப்போது யாரும் என்னை காப்பாற்ற யாரும் வரவில்லை என்றும் பார்க் சர்க்கஸ் ரயில் நிலையம் வரும் பொது என்னை தூக்கி வீசி விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள டிஜிபி , இந்த குற்றம் செய்த குற்றவாளிகள் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்