திமுகவின் கணிப்பை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பொய்யாக்கிவிட்டது !
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் தங்களுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்கிற திமுகவின் கணிப்பை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பொய்யாக்கிவிட்டதாகக் கூறினார்.
தேர்தல் ஆணையத்தைக் குறை கூறும் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை உருவாக்கியதே திமுகதான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவாய்ப்புள்ளதாகவும் இல.கணேசன் சூசகமாக தெரிவித்தார்.
source: dinasuvadu.com