இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்!

Default Image

தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக, நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பரபரப்பின் இடையே தீவிரவாதத் தாக்குதல் அரங்கேறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வருவோரை முறையாக சோதனை செய்யவும், கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய நபர்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் பைகள் என அனைத்துமே சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதேபோல, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்