பந்து வீச்சில் சதம் அடித்த ரஷீத்கான் என கிண்டல் செய்த கிரிக்கெட் வாரியம் !

Default Image

கடந்த 18-ம் தேதி இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப் போட்டியில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 9 ஓவர்களில் 110 ரன்கள் கொடுத்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் கொடுத்தவர் என்ற பெயரைப் பெற்றார்.
இந்நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் ரஷீத் கானை  கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளது. இந்த பதிவில் “இந்த உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் சதத்தை ரஷீத் கான் அடித்து விட்டார்.
53 முதல் பந்தில் 110 ரன்கள் கொடுத்து உலக கோப்பையில் மற்றும் மற்ற போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்த வீரர் சாதனை படைத்து விட்டார். என பதிவிடப்பட்டு உள்ளது.ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பதிவிற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் லுக்  ரைட் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்