தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை!!!
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ஜெயராஜ் நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவரது மகன் செந்தூர்முருகன் (21). டிப்ளமோ இன் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையாம். இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் எஸ்ஐ சிவலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.