அதிமுகவில் கோஷ்டி பூசலா ?முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Default Image

அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில்  இன்று  முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தேர்தல் வாக்குறுதியின்படி கவுண்டம்பட்டியில் இருந்து நயினாம்பட்டி வரை ஆற்றுப்பாலம் கட்டித்தரப்பட்டுள்ளது.
மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு விழாவில் திமுகவினர் பங்கேற்கவில்லை .குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாலம் திறப்பு விழாவில் திமுகவினர் பங்கேற்றனர்.
அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல் .ராஜன் செல்லப்பாவின் பேட்டியை பார்த்த பிறகே அது பற்றி கருத்து கூற முடியும்.
அதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி ஆகும்.இதில் எல்லாருமே தலைவர்கள் தான் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்