தோனி வீட்டில் கொள்ளையடித்த மூன்றுபேரை போலீஸ் கைது செய்தது

Default Image

உத்திரபிரதேசம் மாநிலம் நெய்டாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சொந்தமான வீடு ஓன்று உள்ளது.அந்த வீட்டில் தற்போது விக்ரம் சிங் என்பவர் வசித்து வருகிறார்.
அந்த வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விக்ரம் சிங்  வீட்டில் இருந்த சில விலையுயர்ந்த பொருள்களான எல்இடி டிவி  மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கபட்டது.

 
இந்தத் கொள்ளை சம்பவம் குறித்து நெய்டா போலீஸ் அந்த மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் ராகுல் ,பப்லு ,இக்லாக் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து  இன்வெர்ட்டர்கள் , 5 மடிக்கணினி ,5 எல்இடி டிவிகள் கைப்பற்றப்பட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என கூறி கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கூறுகையில்,வெளிச்சம் இல்லாத வீடுகளில் யாரும் இல்லை என்பதை அறிந்த பின்னர் கொள்ளையில் ஈடுபடுவதாகவும்,மேலும் காலிங் பெல்லை அழுத்தி யாரும் வரவில்லை என்றால் தான் பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்