உ.பி யில் பயங்கரம் – 3 வயது சிறுமி கற்பழித்து படுகொலை!

Default Image

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் தப்பால் நகரில் மூன்று வயது சிறுமியான ட்விங்கிள் சர்மா என்பவர் கற்பழித்து  படுகொலை செய்யப்பட்டுள்ளது  நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக ஜாகித் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 30ம் தேதி காணாமல் போன சிறுமி ட்விங்கிள் சர்மா , ஜூன் 2 ம் தேதி வீட்டின் அருகே ஒரு மைதானத்தில் சடலமாக கண்டுபிக்கப்பட்டுள்ளார்.உடற்கூராய்வில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பது தெரிகிறது.மேலும், கண்கள் இரண்டும் வெளிவந்த நிலையிலும்,முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு முகம்  சிதைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.இது தொடர்பாக நடந்த விசாரணையில்,கடந்த செவ்வாய்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிக்கு தக்க தண்டனை வேண்டி சமூக வலைத்தளங்களில் “TwinkleSharma” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update