கட்டாய ஹெல்மெட் சட்டம் : இன்று போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு

ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று  கேள்வி எழுப்பியது .
இதற்கு  தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.அதில், வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்று விளக்கம் அளித்தது.இறுதியாக இன்று  போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று  உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.