புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு

Default Image

நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதனையடுத்து புதுச்சேரி சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில் இன்று இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி இன்று நடைபெற்றது.ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்துவை தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வானார்.மேலும் நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து பதவி ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்