போதுமான எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை-காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

Default Image

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,மக்களவையில் போதுமான எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை .எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற தேவையான 54 உறுப்பினர்கள் இல்லாததால் கட்சி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்