கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓகி புயலால் பெரும்பாலான மீனவர்வர்கள் கடலுக்குள் சென்று இன்னும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
கன்னியாகுமரியில் வள்ளவிளை மற்றும் சின்னதுறை கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் எத்தனை பேர் இறந்தனர் என தகவல்கள் வெளியாகி அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். அதில் வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 33 மீனவர்களும், மேலும், அவர்களில் வெளியூர் மீனவர்கள் 37 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மேலும், சின்னத்துறையில் மட்டும் 39 மீனவர்களும், அதுபோக சின்னத்துறை படகுகளில் இருந்து சென்ற வெளியூர் மீனவர்கள் 25 பேரும் பலியாகினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
source : dinasuvadu.com