உலகக்கோப்பை : பயிற்சி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா.!

Default Image

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.மேலும் உலககோப்பை  போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

தற்போது  எல்லா அணிகளும்  முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.சவுதம்டனில் இந்தியாவிற்கான முதல் பயிற்சி போட்டியில்  நியுசிலாந்தை எதிர்கொண்டது.

இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்திய  பேட்ஸ்மேன்களின் சொதப்பாலால் நியூசிலாந்திடம் தோற்றது.

நியூசிலாந்தின் பந்து வீச்சில் ரோகித் சர்மா 2 ரன்னிலும் , ஷிகர் தவான் 2 ரன்னிலும் ,அதன் பின் களமிறங்கிய  கேப்டன் கோலி 18  ரன்னிலும் , அவுட்டாகினர்.

ஹர்திக் பாண்டியா 30 ரன்னிலும் ,டோனி  17 , திணேஷ் கார்த்திக்  4 ரன்னிலும் எடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.115 ரன்கள்  எடுப்பதற்குள் இந்திய அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அதன் பின் ஜடேஜா மற்றும் குல்தீப் இருவரும் அணியின் ரன்களை சற்றே உயர்த்தினர்.ஜடேஜா அரை சத்துடன் 54 ரன்னில் வெளியேறினார்.குல்தீப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்து இந்தியா 179 ரன்னில் சுருண்டது.

இந்த பின் களமிறங்கிய நியூசிலாந்து 37.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அந்த அணியின் ராஸ் டெய்லர் 79 ரன்னும் , கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்னும் எடுத்து அசத்தினர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நிசம் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.நேற்றைய ஆட்டத்தில் இந்திய தரப்பில் விக்கெட் கிப்பராக   திணேஷ் கார்த்திக் செயல்பட்டார்.மேலும் இந்தியா நாளை பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை எதிர்கொள்கிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்