மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கவில்லை-கே.எஸ்.அழகிரி

Default Image

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியானது.ஆனால் அவர் விலகவில்லை.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல் காந்தி தொடர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம் ஆகும்.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கவில்லை. காங்கிரஸ்காரர்கள்தான் தோற்றுள்ளனர். தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்டது சறுக்கல்தான், வீழ்ச்சியல்ல என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்