கொண்டாட்டத்திற்கான நேரமிது : எச்.ராஜா

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான, தேர்தல் முடிவில் நேற்று வெளியானது. இந்நிலையில், இரண்டாவது முறையாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சியமைக்கிறார்.

இந்நிலையில், சிவகங்கை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எச்.ராஜா தோல்வியை சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர் தனது பேஸ் புக் பக்கத்தில், ‘கொண்டாட்டத்திற்கான நேரமிது. பாஜக சென்ற முறையை விட 20 இடங்கள் அதிகம் பெற்று 302 தொகுதிகளுடன் நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். தமிழக தேர்தல் முடிகள் குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும். சிவகங்கை தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment