காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா?ராகுல் காந்தி பதில்

Default Image

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய அளவில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் ஏறக்குறைய பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.இதனையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது ,மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் தங்களின் முடிவுகளை தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.

அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிதி இராணிக்கு எனது வாழ்த்துகள் மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை .மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் என்றேன் முடிவு எடுத்துள்ளார்கள் தலைவணங்குகிறேன்.மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவீர்களா என்று செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்ட கேள்விக்கு, இதற்கு காங்கிரஸ் கட்சியின் காரிய குழுவே  முடிவெடுக்கும் என்று தெரிவித்துவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்