மும்பை விமான நிலையத்தில் சோதனையின்போது 50கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல்!

Default Image

மும்பை விமான நிலையத்தில் வருவாய்ப் புலனாய்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போது 50கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

மும்பை சாகர் விமான நிலையத்தில் அமைந்துள்ள கூரியர் அலுவலகத்தில் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். விமானத்தில் இருந்து வந்திறங்கிய அனைத்துப் பார்சல்களையும் பிரித்துப் பார்த்தபோது துபாயில் இருந்து அனுப்பப்பட்ட பார்சல் ஒவ்வொன்றும் இரண்டரைக் கிலோ எடை கொண்ட வட்டு வடிவிலான 20தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இவற்றைக் குஜராத் மாநில முகவரிக்கு அனுப்பியுள்ளதால் அது குறித்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளின் சந்தை மதிப்பு 15கோடி ரூபாயாகும். நேற்று டெல்லி விமான நிலையத்தில் 26கிலோ தங்கமும், பெங்களூரில் 33கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்