தேர்தல் முதல் நாளே விரலில் மை வைத்து ரூ 500 கொடுத்த பாஜக
ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் நேற்று நடந்த ஏழாம் கட்ட இறுதி வாக்குப்பதிவு உடன் முடித்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் வாக்காளர்களின் விரலில் மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
பாஜகவை சேர்ந்த மூன்று பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ500 கொடுத்து விட்டு சென்றதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் நீங்கள் எங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் வாக்களிக்க முடியாது என கூறியதாக புகார் கூறியுள்ளார்கள்.