கேதார்நாத்தில் பிரதமர் மோடி நாடகம் – ராகுல் காந்தி
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் தேர்தல் தேதி, நமோ டி.வி., தற்போது கேதார்நாத்தில் பிரதமர் மோடி நாடகம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி நேற்றுடன் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் ,வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் தேர்தல் தேதி, நமோ டி.வி., தற்போது கேதார்நாத்தில் பிரதமர் மோடி நாடகம். பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்தது வெளிப்படையாக தெரிந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.