ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கே !

Default Image

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 30-வது ஆண்டு நினைவுதினம், வரும் 24ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளதாகவும், மதுசூதனன் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பானது, கருத்து திணிப்பு எனவும், இந்த தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்