மோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு குலைக்கப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையமே சாட்சி- ப.சிதம்பரம் ட்வீட்

Default Image

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஒரு கடிதம் எழுதினார் .அதில் அவர் மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை ,எனவே நான் இனி எந்த கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார். இதற்க்கு பதில் அளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பது இயல்புதான் என்றார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.அதில் மோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு குலைக்கப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையமே சாட்சி. சில விஷயங்களை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை வாக்காளர்கள் கண்டுகொள்ளக்கூடாது என்கிறாரா ஆணையர்? என்று  ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்