அடுத்தடுத்து புது புது முயற்சிகளுடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று MR லோக்கல் திரைப்படம் வெளியானது. ராஜேஷ் இயக்கிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்தை அடுத்து இன்னும் 4 படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதில் முதல் படம் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படம். இப்படம் இரும்புத்திரை போல சமூக கருத்துள்ள திரைப்படமாக உருவாகி வருகிறது..

அடுத்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இயக்குனரின் முந்தைய படம் போல அறிவியல் சார்ந்த படமாக உருவாக உள்ளதாம். அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உடன் நடிக்க உள்ளனர்.

அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்க நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் காதல் படமாக உருவாக உள்ளது. ஆதலால் அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு திரை விருந்தளிக்க சிவகார்த்திகேயன் தயாராகி வருகிறார் என தெரிகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment