IPL 2020 அணிகளையெடுப்பில் சிஎஸ்கே…! தோனி விளையாடுவாரா..? சிக்கலை தீர்த்த சிஎஸ்கே தரப்பு
IPL 2020 : தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவார..?என்ற கேள்வி அண்மை காலமாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் சுற்றி கொண்டே வருகின்றது.இதற்கு தோனி IPL 2020 நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார் சற்றே ரசிகர்கள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனம் வைக்கப்படுகிறது.
டோனியின் விமர்சனத்தை காணும் பொழுது இதே போல் கிரிகெட் கடவுளின் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டு அதிக நெருக்கடி அளிக்கப்பட்டது எல்லோருக்கும் நினைவிற்கும்.அதே போல் இப்பொழுது தோனியையும் குறி வைக்கின்றனர். இந்நிலையில் IPL 2020 யில் தோனி சென்னை அணியில் இருப்பாரா..?என்று அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெளிவுப் பட கூறியுள்ளார்.
அதில் தோனியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் அவர் தகர்த்து எறிவார்.மேலும் அவருடைய பேட்டிங் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வழுவாக இருக்கிறது.மேலும் அவர் இந்திய அணிக்காக உலககோப்பையை வாங்கி தந்தவர்.தற்போது நடக்க உள்ள உலகக்கோப்பையில் அவருடைய செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்.
அடுத்தாண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக களம் காணுவார் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனால் தோனி ஐபிஎலில் ஆடுவாரா ..?? மாட்டாரா..? என்ற கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.