ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த – முத்தரசன்

ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் விளைநிலங்களில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, ஜூன் மாதத்தில் விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மக்களை திரட்டி மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் .ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று முத்தரசன்  தெரிவித்துள்ளார்

Leave a Comment