தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! உயர்நீதிமன்றம் அனுமதி!

தூத்துக்குடியில் சென்றாண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பெரும் போராட்டம் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் போது, போலீசார், போராட்டக்காரர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 13பேர் உயிரிழந்தனர்.

இதற்கு இந்தாண்டு மே 22இல் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்க படுகிறது. இதற்க்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது. தற்போது இது குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மே 22 இல் ஒரு தனியார் பள்ளியில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment