திருமணத்திற்கு பிறகு அந்த “வார்த்தையை சொல்ல மாட்டாரு போல” என ஆர்யா பார்த்து கேட்ட சதீஷ்

Default Image

நடிகர் ஆர்யா சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். “கஜினிகாந்த்”  திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாயிஷா. இப்படத்தின் மூலம் இருவருக்கு இடையில் காதல் மலர்ந்தது.

பின்னர் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.நடிகர் ஆர்யா நடிகர், நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருவார்.இந்நிலையில் திரிஷா பிறந்தநாளான நேற்று தனது ட்விட்டரில் திரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அதற்க்கு பதிலளித்த நடிகர் சதீஷ் திருமணத்திற்கு பிறகு அந்த வார்த்தையை சொல்ல மாட்டாரு போல என பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் ‘அந்த’ வார்த்தை டார்லிங் தானே என கூறிவந்தனர். அதற்கு பதிலளித்த நடிகர் சதீஸ், அந்தவார்த்தை டார்லிங் இல்லை என பதிலளித்தார். பிறகு ரசிகர்கள் பலரும் தங்கள் இஷ்டத்திற்கு கமெண்ட் செய்துவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்