ஃபானி புயல் பாதிப்பு: ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்தி வைப்பு-தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

Default Image

ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது  என்று  தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் நேற்று  கரையை கடந்தது. இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது.

புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் நீட்தேர்வை ஒத்திவைக்குமாறு ஒடிஷா அரசு தேசிய தேர்வுகள் முகமைக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் ஒடிஷா அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்