காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் கிரண்பேடி மேல்முறையீடு செய்ய ஒத்துழைக்க மாட்டோம். புதுச்சேரி அமைச்சரவை நிதி ஒதுக்காது ஆளுநராக இல்லாமல் தனி நபராக கிரண்பேடி மேல்முறையீடு செய்யலாம்.

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை ஜிஎஸ்டியை கொண்டு வந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது .மத்தியில் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்  என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்