அதிமுக என்ற பாண்டவர் அணியை, சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அணி ஒரு பாண்டவர் அணி. எனவே, பாண்டவர் அணியை, சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், திமுகவும், அமமுகவும் குழப்பத்தில் உள்ளது என்றும், எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சகுனியும் துரியோதனன் கும்பலும் தான் தற்போது ஒன்று சேர்ந்துள்ளது. மே 23ஆம் தேதிக்கு பிறகு திமுகவும் அமமுகவும் நினைப்பது நிறைவேறாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்